Thursday, December 9, 2010

>õ§ì THANNEER (WATER)

மரங்களின் மகிமை பற்றி
அவசியம் உனக்குச்
சொல்ல வேண்டும்.

மனிதன் உறிஞ்சிய நீர்

சிறுநீர் அல்லது வியர்வை;
மற்றவருக்கு நிழல் தரும்
மரங்கள் உறிஞ்சிய நீர்
பூக்கள் மற்றும் கனிகள்!

மரங்களை மதித்தோமா நாம்?
காடுகள் மழிப்பு
கண்மாய்கள் அழிப்பு
ஓசோனில் ஓட்டை
இப்படியே போனால்
இரண்டாயிரத்து எழுபதில்
இருக்காதாம் தண்­ர்!

ஒரு குவளை தண்­ருக்கு
ஒரு கொலையே நடக்கும்
மரங்கள் மொட்டையாகும்
மனிதரெல்லாம் வழுக்கையாவார்;

மரத்தில் தூளியாடி
மகிழ்ந்த நிகழ்வெல்லாம்
முறத்தால் புலி துரத்திய
புறநானூற்றுப் பாடலாய்
இலக்கியத்தில் மட்டுமே
இருக்கும் இனி!

வகுப்பறையில்
வரலாற்றுப் பாடத்தில்
பூமியில் இருந்து - பின்பு
காணாமல் போன பட்டியலில்
தண்­ர் முதலிடத்தைத்
தக்கவைக்கும் எப்போதும்!!
சம்பளம் 
தண்­ரின் அளவில்
தரப்படலாம்!

தொழிற்சங்கங்கள் 
போராட்டம் நடத்தும்
புதிய சம்பளத்தை
எந்நூறு லிட்டர் தண்­ர்
என்று குறிக்கக் கோரி
போனசாகத் தண்­ர்க் கோரி
போராட்டம் நடக்கும்!

குழாயடியில்
குடுமிபிடி சண்டை இராது
தமிழகமும் கர்நாடகமும்
தண்­ருக்காகச்
சண்டையிடாது!

மாப்பிள்ளை வீட்டார்
வரதட்சிணையில்
ஐந்து குடம் தண்­ர்
அதிகமாகக் கேட்கலாம்?

ஒத்துக்கொள்வதோ
பத்துக் குடம்
அதற்கே விழிபிதுங்க
அதிகம் ஐந்து குடத்திற்கு
எங்கே செல்வார்?

தாகம் தீரத்
தண்­ர்க் குடிப்பது
ஆட்சியாளருக்குக்கூட
ஆடம்பரம் ஆகிப்போகும்?

ஒரு குவளைத் தண்­ர் இருந்தால்
உள்ளூர்ப் பணக்காரர்;
ஒரு குடம் வைத்திருந்தால்
உள்நாட்டுப் பணக்காரர்;
ஒரு அண்டா வைத்திருந்தால்
உலகப் பணக்காரராய்
வலம் வரலாம்!

மூடி வைத்திருந்த மனிதன்
பரிணாமத்தின் படியாய்
குறிக்கப்படுவான்?

முகில் என்று - காதலி
முடியைப் பாட முடியாது, 
முகிலும் இருக்காது
முடியும் இருக்காது
தலையெழுத்தைப் படிக்க
தடையிருக்காது - பாவம்
முடிதிருத்தும் தொழிலாளி?
மனிதர் எல்லாம்
திருப்பதி சென்று
திரும்பியவர் போல
திரிந்து அலைவார்!

துச்சாதனன் பாவம்
பிடித்து இழுத்து வர
பாஞ்சாலிக்கு கூந்தல் இருக்காது!

பாஞ்சாலியும் பாவம்
அவிழ்த்து சபதமிட
அவளுக்கும் கூந்தல் இருக்காது!

முதல் கல்யாணமே
அறுபதாம் கல்யாணம் போல
முதிர்ந்த தோற்றத்தில்
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும்....

திருமணச் சடங்கில்
மாலைகள் என்பது
வழக்கொழிந்த விசயமாகும்!

இறந்தவர் சடலத்திற்கு
இறுதி அஞ்சலிக்கும்
மலர் இருக்காது!

சைவம் மட்டுமே
சாப்பிடுவோர் பாவம்
உண்டு வாழ
ஒன்றும் இராது
சதை உண்பதையும்
சைவம் உண்பதாய்
சகித்தால் மட்டுமே
உயிர் வாழ்க்கைச் சாத்தியம்?

இப்போதே விழிக்கச் செய்
இயற்கையை அழித்தல் தடு
மறுத்துவிட்டால்,

நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
மாண்டு கிடக்கும் நாய் போல
மதிப்பற்றுப் போகும்
மனித வாழ்க்கை!

விழித்தெழாத மனிதனை
பழித்தெழுதும் வரலாறு
இயற்கையை அழித்தது
இந்த நாட்டுமிராண்டிதான் என்று!
ஆகவேதான்
நீயும் விழி
நின் சுற்றமும் விழிக்கச் செய்!

கவிதை 

 

No comments: